வஞ்சம்
நெஞ்சம் புண்ணாக்க
வஞ்சம் சுமந்து வசைபாடி
பொங்கும் இன்பத்தால்
மகிழ்வாகும் நெஞ்சங்களே
எங்கும் பொங்கும் வஞ்சம்
எம்மையும் சூழும்
அன்று நம் நெஞ்சமும்
வலியால் வாடும்
நாம் விதைத்த வஞ்சம்
அவர்கள் நெஞ்சத்தையும்
பாடாய் படுத்தியதை
உணரும் நெஞ்சம்
வஞ்சம் கூறாது வாழும் .
செப்ரெம்பர் 15, 2011 இல் 1316123046
கவிதை நன்றாக இருக்கின்றது, வாழ்க தமிழ் வளர்க உங்கள் தமிழ்.
நன்றியுடன்
உங்கள் சுவிஸ் ஸ்ரீ
செப்ரெம்பர் 20, 2011 இல் 1316550084
சுவிஸ் ஸ்ரீ வணக்கம். வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் மென்மேலும் இணைந்திருங்கள் நன்றி
செப்ரெம்பர் 15, 2011 இல் 1316124576
வணக்கம் கவிநாயகனே! என்ன ஆனது உங்களுக்கு ரொம்ப நாள்லா உங்களை காணமுடியல்லை, நான் நினைத்துக்கொண்டேன் தூறல் நின்று போய்விட்டது என்று. இப்போதாவது மீண்டும் மழை பொழிந்து
உள்ளதே என்ன கொடுமை ஐயா இது ??? அடிக்கடி ஊர்வலம் வந்து போகலாமே? இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
வாழ்த்துகளுடன்
உங்க ரசிகை
தலைத்தீவாள் (ஜனனி)
செப்ரெம்பர் 20, 2011 இல் 1316548633
ஜனனிக்கு வணக்கம்.
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்
மென்மேலும் இணைந்திருங்கள் நன்றி
செப்ரெம்பர் 22, 2011 இல் 1316706550
“எங்கும் பொங்கும் வஞ்சம்
எம்மையும் சூழும்
அன்று நம் நெஞ்சமும்
வலியால் வாடும்
நாம் விதைத்த வஞ்சம்……….”இவ் வரிகள் “தன் வினை தன்னைச் சுடும் ஓட்டப்பம் வீட்டைச்சுடும் “என்ற பட்டினத்தார் கூற்றுக்கமைய நிற்கிறது.நல்லது மனிதர்கள் உணர்ந்து கொள்ள வேண்டிய ஒன்று.
ப்ரியமுடன்,
சிரபுரத்தான்.
செப்ரெம்பர் 22, 2011 இல் 1316724198
சிரபுரத்தானுக்கு இந்த ஒரேபுரத்தானின்
நல்லாசிகள் உங்கள் வாழ்த்துக்களுக்கு
நன்றி மென்மேலும் இணைந்திருங்கள்
நன்றி
அருளீசன்