கொடிய கொடூரம் எது ???
வதைபடும் பிராணிகளின்
வன் கொடுமை கண்டு
தடை போடக் கேட்கும்
உலகம் சித்திரவதை
கூடமாகி வகைதொகை இன்றி
வதைபடும் மக்களை காக்க
இயலாதது ஏன் ???
முயலையும் ,எலியையும்
தவறவைக்க எண்ணும் -உலகம்
மனிதம் படும் அவலத்தை
காணவில்லையோ !!!
கையில் வெண்ணை இருக்க
நெய்யுக்கு அலைகிறது போலும்
ஆதாரம் 200 பிரதிகள் இருப்பதாக
மனித உரிமை மையம்
கூறுகின்ற போதும்
பன்னிரண்டு மாதங்கள்
பறந்தோடிய நிலையிலும்
கேட்பாரும் இல்லை
மீட்பாரும் இல்லை
என்ற நிலை தொடர்கிறது
அடுத்துவரும் ஆண்டிற்குள்
வயோதிபரும் ,
வாழ் இழந்த பெண்களும் தான்
மிஞ்சுவார்கள்
அங்கு நடப்பது இனவெறிதான்
உலகம் இதை எப்போது
உணரும் .
ஜூன் 4, 2010 இல் 1275677089
வணக்கம்
உங்கள் கவிதை மிகவும் நல்ல இருக்கு
ஆனால் இன்னும் கொஞ்சம் நல்ல நிறைவாக
சொல்லி இருக்கலாம் என்பது என்னோட விருப்பம் .
வாழ்த்துக்கள் நலம்பெற ………
ஜனனி
ஜூன் 5, 2010 இல் 1275767621
வணக்கம் ஜனனி ,வாழ்த்துக்களுக்கும்
உங்கள் வருகைக்கும்.
மேன்மேலும் எனது வளர்ச்சிக்கு
உங்கள் ஆதங்கமும் ஆசியும் நெறிப்படுத்த
வாருங்கள் வளர்த்தெடுங்கள்
நன்றி